Wednesday 21 March 2012

கல்வெட்டு:9. (சிலாசாஸனம்:9)

கல்வெட்டு;-9
சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் ஆலயத்தின் வடிவமைப்புக்கள்.


1)சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு 4வாசல்கள் உள்ளன.


2)மேலக்காவு,கீழக்காவு என இரு முக்கியமான அம்பாள் சந்நிதானங்கள் அங்கு உள்ளன.
மேலக்காவில் பகவதிதேவியும்,
கீழக்காவில் பத்ரகாளியும் அருள்பாலிக்கின்றனர்.


3)மேலக்காவு பகவதிக்கோவிலில் மேற்குநோக்கி கொடிமரம் உள்ளது.பகவதியும் மேற்குதிசை நோக்கி காட்சித்தருகிறார்.அதன் உள்ளேயே,"சாஸ்தா"வின் சந்நிதானம், உள்ளது.


4)மேலக்காவு கோவிலின் வலப்பிரகாரத்தில்,தலவிருக்க்ஷம் உள்ளது.
இக்கோவிலின் தலவிருக்‌ஷம் "பவளமல்லி",.


5)மேலக்காவு பகவதிகோவிலின் பின்புறம்,"சிவன் சந்நிதானம் உள்ளது.
கிழக்கு திசையில் .வடகிழக்குமூலையில் "நாகராஜர்",சந்நிதானம் உள்ளது.


மேலக்காவில் பகவதி அம்மனை தரிசனம் செய்ததும்,
நாம் செல்லவேண்டிய இடம்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில்.


6)கீழக்காவு பத்ரகாளி கோவில்,மேலக்காவு கோவிலில் இருந்து பல படிக்கட்டுக்களை கடந்து செல்லும்வன்னம் அமைந்துள்ளது.


7)அந்தப்படிக்கட்டுக்களை கடக்கும் வழியில் ,வலப்புறம் "ஐயப்பன் சந்நிதானம்",,உள்ளது.
ஐயப்பன் சன்னிதானத்திற்குமுன்
"வெடிவழிபாடு",செய்யும் இடம் உள்ளது.


8)அந்தப்படிகட்டுக்கள் முடியும் இடத்தில்,கோவிலின் குளம் அங்கு உள்ளது.
அந்தக்குளத்தைச் சுற்றி வலப்புறமாக வலம் வந்தால் அங்கு "சங்குசக்ர",வடிவில் நாராயண தத்துவம் உள்ளது.


9)அதைக்கடந்ததும்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில் சன்னிதானம் வருகிறது.
கீழக்காவில் உள்ள பத்ரகாளி அக்காள் என்றும்,
மேலக்காவில் உள்ள பகவதியம்மன் அவளின் தங்கை என்றும் ஐதீகம் உள்ளது.


10)இந்தக் கீழக்காவு கோவிலில்தான்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தீயசக்திகளினால் ஆட்க்கொள்ளப்பட்டவர்களும்,அனைவரும் பரிகாரத்திற்கும்,தங்களைப்பிடித்த தீயசக்திகள் விலக பூஜைகள் செய்யவும் வருகின்றனர்.
இந்தக் கீழக்காவு சன்னிதானத்தில்தான் குருதிபூஜை இரவு 8.30மணிக்குமேல் நடைப்பெறும்.

No comments:

Post a Comment