Friday 16 March 2012

கல்வெட்டு;-5 (சிலாசாஸனம்;-5)


19ம் நூற்றாண்டு சரித்திரத்தில் நடந்த ஒரு முக்கியப்பகுதி;


எர்ணாக்குளம்,தெய்வத்திரு கதிர்கடவு மேல்சாந்தி காசிநாதர் நம்பூதிரியின் வாழ்க்கை சிரித்திரம்:


எர்ணாக்குள,ம்,
ஜூன்5,1909ஆண்டு,
கூச்சாமணிஅம்மவுக்கும்,ஆழப்புழா விஸ்வநாதஅச்சப்பாவிற்கும்,மகனாய் பிறந்தவர் காசிநாதர்.
அவரது தந்தை ஆழப்புழா கோவில் குருக்கள்.
காசிநாதர் இளம் வயதிலேயே தன் தந்தையோடு பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வதுண்டு.
தன் தந்தை கோவிலில் பூஜைகள் செய்துக் கொண்டிருகும்போது ,
கோவிலின் பிராகாரங்களில் தன் கண்ணில்பட்ட இடங்களில் எல்லாம் ,
சிறுசிறு கற்களை ஸ்வாமிசிலைகள் போல் அடுக்கி வைத்து கோவில்போல் மணலில் செய்து அதற்கு பூ போட்டு குழந்தைத்தனமாக பூஜைகள் செய்து வணங்குவார் காசிநாதர்.
"கண்டகண்ட இடங்களில் எல்லாம் இப்படி ஸ்வாமியை பிரதஷ்டை செய்வது,கோவில்போல வணங்கக்கூடாதுடா...",
என அனைவரும் காசிநாதரிடம் கூறுவார்கள்.
அதற்கு 7வயது சிறுவனான காசிநாதர்,
"என் பகவதி வந்து தப்புன்னு சொன்னால்தான் நீங்க சொல்வதை ஒப்புக்கொள்வேன்.எனக்கும் பகவதிக்கும் ஆயிரம் இருக்கும் இடையில நீங்க யாரு குறைகூறுவதற்கு?",
என கேட்பான்.


காலங்கள் கடந்தது.
18வயதில்,காசிநாதர் தன் தந்தையைவிட பலமடங்கு மந்திரக்கலைகளை கற்று பிரபலமாக விளங்கினான்.
ப்ரஸன்னம் என்னும் தேவதாசித்திக்கலையில் காசிநாதர் சிறந்து விளங்கினார்.
ஒருவரது ஜாதகத்தைப் பார்த்துமே அவரது இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் இவற்றை வியக்கும்வன்னம் கூறிவிடுவார்.அதற்கு யாரிடமும் பணவசூல் செய்வதும் கிடையாது.எனவே மக்கள் அனைவரும் அவரிடம் தங்கள் குறைகளுக்கு பரிகாரம் கேட்டு வரத்தொடங்கினர்.


இறந்துப்போனவர்கள்கூட ,ஆத்மாவாக வந்து காசிநாதரிடம் தன் குறையையோ.,அல்லது தன் வம்சத்தினர் முன்னேற்றதிற்கோ,அவரிடம் ப்ரஸனத்தில் கோரிக்கைகள் வைப்பார்களாம்.
காசிநாதரோ,இறந்துப்போன மூதாதையர்களின் குறைத்தீர்க்கும் அச்சம்பிரதாயத்தை,"ஸ்தூலப்ரஸன்னம்", என , பெயரிட்டு,அதை சாஸ்திரமுறைப்படி தன் சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
உயிருடன் வாழும் ஒருவரைப் பார்த்ததும் அவர் மனம் அறிந்து மனதுக்குள் உள்ள அனைத்தையும்,கணித்துக் கூறுவதைப்போல்,
இறந்துப்போன ஒருவரது புகைப்படத்தைப் பார்த்ததுமே,அவருடைய தேவையென்ன?
அவரது தற்போதைய நிலையென்ன?
அவர் தன் குடும்பத்துக்கு கூற நினைப்பது என்ன?
என அனைத்தையும் அறிந்துவிடுவார்.
ஆத்மாக்களுக்கும்,காசிநாதர்க்கும் மனதுக்குள் உரையாடலே நடக்கும் என அவரது சிஷ்யர்கள் இன்றும் கூறுகின்றனர்.


ஆத்மாக்களின் குறைகள் மட்டும்மின்றி,
மனிதர்களின் குறைகள் மட்டும்மின்றி,
கோவில்களில் உள்ள தோஷங்கள்,கோவில் சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பது,
தாணியங்கள் செழிக்க பரிகாரங்கள்,
பேரழிவை உருவாக்க இருக்கும் இயற்கையை கட்டுப்படுத்தி அமைதி ஆக்குவது,
கிரஹனங்களின் உக்கிரங்களை ஆசுவாசப்படுத்துவது,
போன்று பலவிதக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்.


ஒருசமயம் தனது மந்திரசக்தியால்,பகவதி அம்மனையே கட்டிப்போட்டு,தேவதைகளுக்கு வேடிக்கைக் காட்டினார்.


பகவதியோ சிரித்துக்கொண்டே,
"இன்று என்னை கட்டிப்போட்டு நீ ரசித்தாய்.
என்னில் எளிய தேவதைகளுக்கு என்னை காட்சிப்பொருளாய் வைத்தாய்.
நான் உனக்காக என் வேதனையை பொருத்துக்கொண்டேன்,.
உன் மறுஜென்மத்தில் உன்னை நான் ,சிலகாலம் கட்டிப்போட்டு,
உன்னில் எளியவர்க்கு உன்னை காட்சிப்பொருளாய் வைப்பேன்,
அப்பொழுது எனக்காக நீ உன் வேதனயைப் பொறுத்துக்கொள்ளவேண்டும்..",
என்றாளாம்.
முக்காலமும் அறிந்தமகானாய் திகழ்ந்த காசிநாதர்,முற்பிறவியில் மலையாலதேசத்தில்
சித்தராக வாழ்ந்தவர் என அவரது சிஷ்யர்களில் ஒருசிலர் இன்றும் கூறுகின்றனர்.


"என் மரணம் நெறுங்கிவிட்டது....
1969ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நான் இருதயநோயினால் இம்மண்ணைவிட்டு
செல்வேன்...எனது ஜெனனம் தொடரும்.
என் மறுஜென்மம்,கண்டிப்பாக கேரளதேசத்தில் இருக்காது.
என் மக்கள் ,என் சிஷ்யர்களை ,என் தேசத்தைக் காண ஒருசராசரி மனிதனாய்,
பலதுயரங்களில்,பாவங்கள் செய்தவனாய்,என் பகவதியைத் தேடி நான் வருவேன்.
சராசரி மனிதனாய் வரும் என்னை மீண்டும் கலைகள் கற்ற காசிநாதனய் உள்ளத்தால்
உருவெடுக்க வைத்து ரசிப்பாள் என் பகவதி.
என் கலைகளை ,என் சிஷ்யன் ஷீனிவாசுதம்புரானுக்கு,அருளி உள்ளேன்.
அதை மீண்டும் நானே அவன் மூலம் பெறுவேன்...",
என புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்.


அவர்கூறியபடியே...அவரது மரணம் அமைந்தது.
ஆனால் மறுஜென்மம் எடுத்தாரா?
கேரளாவிற்கு வந்தாரா?
அவையெல்லாம் நடந்ததா?இல்லையா?
என்ற கேள்விக்கு,
இன்று ஒருசிலர் ஆம் என்கின்றனர்.ஒருசிலர் இல்லை என்கின்றனர்.
இந்தக்கேள்விகளுக்கு விடை அன்னை சோட்டாணிக்கரை பகவதிக்கு மட்டுமே
தெரியும்......................