சோட்டாணிக்கரை திருத்தல பழமையான சரித்திரம்.
(18ம் நூற்றாண்டு).
சோட்டாணிக்கரே அம்பல ப்ராஸின சரித்ரா...
(18ம் நூற்றாண்டு).
ஆதிவாசியினர் வம்சத்திற்குப் பின்னர்,
கண்ணப்பன் வம்சாவழியினருக்குப் பின்னர்,
18ம் நூற்றாண்டில் சோட்டாணிக்கரயில் பலதரப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்துவந்தனர்.
ஓர்நாள்,அந்தக் காட்டில் பெண் ஒருத்திப் புல் அறுத்துக்கொண்டிருந்தாள்.அப்பொழுது தனதுக் கத்தியைக் கூர்மையாக்க அதை அருகில் இருந்தக் கல்லின் மேல் தீட்டினாள்.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.
ஆம்....அவள் கத்தியை கல்லில் மேல் தீட்டியதும் அந்தக் கல்லின் மேல் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.
அதைக்கண்ட அந்தப்பெண்,அச்சத்தில் சத்தம்போட்டு அனைவரையும் அழைத்தாள்.
அவளது கூக்குரலைக் கேட்டு,
இடத்து நம்பூதிரிகளும்,ஊர்மக்களும் அவ்விடத்துக்கு ஓடிவந்தனர்,.
அனைவரும் அந்தக் கல்லினைக் கண்டு கைத்தொழுது நின்றனர்.
அப்பொழுது அங்கிருந்த ஒரு 4வயது சிறுமி,
"மக்களே அச்சப்படவேண்டாம்.நான் பகவதி அம்மன் வந்திருக்கிறேன்.ஆதிக்காலத்தில்,ஆதிவாசிப்பெண் ஒருத்தியும்,பிற்காலத்தில் கண்ணப்பன் என்ற வேடனும் என்னை வழிப்பட்ட இடம் இது. இந்தக் கல் கண்ணப்பன் வளர்த்த பசுக்கன்றினுடையது.
நான் இங்கே பகவதி அம்மனாக வீற்றிருப்பேன்.
மனநிலை பாதிக்கப்பட்டோர்க்கு,
தீயசக்தியினால் ஆட்க்கொண்டு அவதிப்படுவோர்க்கு,
மனக்கவலையில் வேதனையில் கண்ணீர்விடுவோர்க்கு,
சங்கடங்கள் போக்கும் ஷக்தியாய் இருப்பேன்.
இவ்விடமே பிற்காலத்தில் சோட்டாணிக்கரை எனும் திருத்தலமாய் விளங்கும்....",
என்று அருள்வாக்கு கூறியக் குழந்தை கலகலவென சிரித்தது.
அதன்படியே .,இடத்து நம்பூதிரிகளும்,மேல்சாந்தி குருக்கள்களும்,பகவதிக்கு இன்றும் பூஜா வழிமுறைகளை சரியாக செய்துவருகின்றனர்.
No comments:
Post a Comment