Wednesday 14 March 2012

கல்வெட்டு:-2..(சிலாசாஸனம்:-ரண்டு)


சோட்டாணிக்கரை திருத்தலம்:-
கி.பி.,16ம் நூற்றாண்டு சரித்திரம்....
சான்றுகள்:-ஆதிபகவதி தேசம், என்ற பழமையான மலையாள நூலில் இருந்து...
ஆசிரியர்;-தெய்வத்திரு கதிர்கடவு மேல்சாந்தி காசிநாதர்நம்பூதிரி அவர்கள்.


(சோட்டாணிக்கரே அம்பலத்தினொடு
ஏ.டி.16 நூற்றாண்டு சரித்ரா....)
தெளிவு:-ப்ராசீன பகவதி தேசம்மென்ட  மலையாள க்ருதத்தில் இருந்நு...




கி.பி...நூற்றாண்டில் இந்தப்பகுதி விதவிதமான மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது.
அக்காட்டில் ஆதிவாசிகள் வாழ்ந்துவந்தனர்.
அந்த ஆதிவாசிகளில் பெண் ஒருத்தி பகவதிஅம்மனை மானசீகமாக வழிப்பட்டுவந்தாள்.
அப்போது அங்கு கோவிகள் ஏதும் இல்லை.
எனவே அந்த ஆதிவாசிப்பெண் ,"பகவதி அம்மனை",
"அரூப ரூபமாக" வழிப்பட்டு வந்தாள்.
பகவதி அம்மனின் உருவத்தை அவள் தனக்குத்தானே மனதுக்குள் கற்பனை செய்து வழிப்பட்டாள்.


அப்பெண்,பகவதி அம்மனையும்...,
ஒரு ஆதிவாசிப்பெண்ணை போலவே சித்தரித்து வழிப்பட்டாள்.
அம்மனுக்கு மேல் ஆடை ஏதும் இல்லாததுப்போல் ,
இடுப்புக்கீழே பூக்களையும் இலைதழைகளையும் உடுத்தியதுப் போலவும்,
கற்பனை செய்தே வழிப்பட்டுவந்தாள்.


பகவதி அம்மனை அவள்,..
"அம்மே நாராயாணா...தேவி நாராயணா....",
என்றுக்கூறியே வழிப்பட்டாள்.
(இதுவே தற்போது அம்மனின் மூலமந்திரமாகும்).
அவளது உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் பகவதிஅம்மன் அடிமை ஆகினாள்.
ஒருநாள்....இரவு,
அந்த ஆதிவாசிப்பெண்ணிற்கு பகவதி அம்மன் "ஜோதி வடிவமாக",காட்சித்தந்தாள்.


இதானாலே அப்பகுதி,,"ஜோதியான கரை",
என ஆதிவாசிகளால் அழைக்கப்பட்டது.
இதுவே காலப்போக்கில் "ஜோதிக்கரை",
என்றாகி, நாளடைவில் "சோட்டாணிக்கரை",
என்றானதாக அந்நூலுல் இருந்து விளக்கம்
தரப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment