Wednesday 4 April 2012

கல்வெட்டு:12. (சிலாசாஸனம்:-12)

கல்வெட்டு;-12

சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவில் பூஜை முறைகள்;-



சோட்டாணிக்கரைக் கோவிலில் சாதாரண காலங்களில் காலை 4மணிக்கும்,
வெள்ளிக்கிழமை மற்றும் மற்ற விசேஷக்காலங்களில் காலை 3.30மணியளவிலும் நடைத்திறப்படுகிறது.
நடைத்திறக்கப்பட்டு நிர்மாலயம் அகற்றப்பட்டு,திருவிளக்கு ஏற்றப்பட்டு சூரிய உதயத்திற்க்குள் அபிஷேகமும் .நைவேத்யமும் செய்விக்கப்படுகிறது.
யக்‌ஷிவதத்தை குறிப்பிடும் விதமாக தேவிக்கு காலை இருமுறை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒருமுறை யக்‌ஷி என்ற துற்தேவதையை தேவி வதம் செய்தாள்.அதையே யக்‌ஷிவதம் எகின்றனர்.


அழகியப்பட்டாடையும்,அலங்கார நகைகளும் அணிவித்தவுடன் மூகாம்பிகை சரஸ்வதிதேவி முழுப்பரிணாமத்துடன் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதிக்கும் எதிர்த்தபூஜா,துவாதஷக்சரி மந்திர பூர்வ மலர் அர்ச்சனையுடன்
பூஜைகள் இனிதே நடைப்பெறுகின்றன.


காலை ஷீவேலி முடிந்தவுடன் தேவிசரஸ்வதி மூகாம்பிகைக்கு சென்றுவிடுவதாகவும்,
காலை 7மணிக்கு சோட்டாணிக்கரையில் ஷீவேலி நடந்து முடிந்தப்பின்னரே .கொல்லூர் மூகாம்பிகைதேவிக்கு பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

பந்தீரடி பூஜைக்கு முன்பாக துவாஷாக்சரி அர்ச்சனை நடந்து முடிந்துவிடும்.



கண்களைகூசச் செய்யும் அளவிற்கு,தங்ககவசத்தில் ஒளிரும்தேவி அலங்காரம் பந்தீரடி பூஜையின்போது சிறப்பாக செய்யப்படுகிறது.
பின்னர் பஜனம் இருப்பவர்களுக்கு பூஜிக்கும் குருமார்களால் புனிதத்தீர்த்தமும் ,பஞ்சக்கவ்ய கிருதமும் வழங்கப்படுகிறது.
இஒதன்பின்னர் சுமார் 11மணியளவில் சிவபெருமானுக்கு அபிஷேகமும்,
அலங்காரமும் ஆரம்பம் ஆகிறது.
ருத்ரதாண்ட மூர்த்தியிடம் பூத,பிரேத பிசாசுகள் அல்லல்பட்டு அபயம் கேட்டு நிற்கும்வன்னம் சிறப்பாக நடைப்பெறும்.   




சுமார் 11.45நிமிடங்களுக்கு உச்சி பூஜையும்,அதைத்தொடர்ந்து ஷீவேலியும் நடத்டப்ப பெற்று நடை அடைக்கப்படுகிறது.
மீண்டும் மாலை 4.00மணியளவில் ,நடைதிறப்படுகிறது.


மாலை 7.00மணிக்கு முன்னராகவே தீபஆராதனை முடிவடைகிறது.
சுமார் 8.00மணியளவில் அத்தாழபூஜையினைத் தொடர்ந்து ஷீவேலியுடன் மேலக்காவு கோவில்
அடைக்கப்படுகிறது.
காலையும் மாலையும் யானைமீது ஏறி உற்சவ அம்பாள் மும்முறை பிரதட்சணமாக வந்து
அருளாசி வழங்குகிறாள்.


அதன் பின்னர் மேல்சாந்தி கிளித்து "குருதிபூஜை",
செய்வதற்காக ,கீழக்காவு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு'
செல்கிறார்.
குருதிபூஜையானது,பூத பிரேத ,பிசாசுகளின் கொட்டம் அடங்குவன்னம் மிகவும் கம்பீரமாக
மேல்சாந்தி அவர்களால் செய்விக்கப்படுகிறது.
மேல்காவு கோவிலில் நடைஅடைக்கப்பட்டப் பின்னர் கோவிலின் தெற்குவாசல்வழியாக 
பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிகிடையாது. 

No comments:

Post a Comment