Monday 19 March 2012

கல்வெட்டு:6.(சிலாசாஸனம்:6)


20ம் நூற்றாண்டில் ஓர் சரித்திரம்.....


திருச்சூர் மாவட்டம்,தலப்பிள்ளே தாலுக்காவில்,வாழுந்துக் கொண்டிருக்கும்,
"கடவல்லூர் ஹரிகிருஷ்ணம்மே தம்புராட்டி"அவர்களின் சரித்திரம்...


திருச்சூர் மாவட்டம் தளப்பில்லே தாலுக்காவில்  கடவல்லூரில், ராமகிருட்டிணபணிக்கருக்கும் பிரபாவதிக்கும் ஒரே ஒரே மகளாய் பிறந்தவர் ஹரிகிருஷ்ணம்மா.
கிருஷ்ணம்மாவின் பெற்றோர்,அவரை நன்குப் படிக்கவைக்க எண்ணி அவரை அருகில் உள்ள பாடசாலைக்கு படிக்க அனுப்பினர்.
ஒருசமயம்,கிருஷ்ணம்மாளைக் காண அவளது பள்ளிக்கு,அவளது தந்தை ராமகிருட்டணபணிக்கர்  சென்றார்.
"கிருஷ்ணம்மாள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும் அவள் நிறைய பொய் பேசுகிறாள் ",என்றும் ஆசிரியர்கள் புகார் கூறினார்கள்.
அதைக் கேட்ட பணிக்கர் மனவேதனை அடைந்தார்.
அன்றிரவு,
"இன்னைக்கு பள்ளிக்குப் படிக்கப் சென்றாயா?என்னப்பாடம் படித்தாய்?".
என்று பணிக்கர் கேட்டதும்,
"பள்ளிக்குப் போனேன் அப்பா.அங்கு இன்னைக்கு இலக்கியப் பாடம் படித்தேன் ",
என கிருஷ்ணம்மாள் சிறிதும் யோசிக்காமல் பொய்கூறினாள்.
10வயது உடைய தன் மகள் கூச்சப்படாமல் பொய் பேசுவதை எண்ணி பணிக்கர் வேதனை அடைந்தார்.அவர்,அவளிடம் தான் பள்ளிக்கு வந்ததைக் கூறவில்லை.


மறுநாள் ,கிருஷ்ணம்மாள் பள்ளிக்கு கிளம்பியதும் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்தார் பணிக்கர்.
பள்ளிக்கு செல்லும் பாதையை விட்டு காட்டுப்பாதைப் பக்கமாக அவலது கால்கள் விறுவிறுவென சென்றன.
பெரியவர்களே செல்ல அச்சப்படும் காட்டுப்பாதைக்குள் அவள் போவதைக் கண்ட பணிக்கருக்கு சற்றே அச்சம் ஏற்பட்டது.
ஒருப் பெரிய பாம்புப்புற்றின் அருகே சென்ற கிருஷ்ணம்மாள்,
"ஏய் பகவதி வெளியே வாடி....உனக்காக இன்னைக்கு தேங்கப்புட்டும் பாலும் கொண்டாந்திருக்கேன்..",
என்று கூறி,தான் பள்ளிக்கு சாப்பிடக் கொண்டுவந்த பலகாரத்தை புற்றின் கீழே வைத்தாள்.
புற்றில் இருந்து 6அடி நீளம் கொண்ட நல்லப்பாம்பு ஒன்று சரசரவென வெளியே வந்தது.
அவள் வைத்த தேங்காப்பால் புட்டினை நாவினால் நக்கி உண்டுவிட்டு,...அவளது உடலின் மேலே ஏறி விளையாடத்தொடங்கியது.
கிருஷ்னம்மாளோ..பாம்பினை முத்தம் கொடுத்து கொஞ்சியவளாய் கலகலவென சிரித்து விளையாடினாள்.


மறுநாள்,
"உன் பொண்ணுக்கு ஏதோப் பேய் புடிச்சிருக்கு",என பணிக்கரின் நண்பர்கள்.,
"வாயைத்திறந்தாலே பொய் சொல்ற உங்கப்பொண்ணுக்கு பகவதி எப்படிங்க வசப்படுவாள்?அவள் எதோ மாயவித்தைக்காட்டி உங்களை ஏமாத்துறாள்",என ஆசிரியர்கள்,
"அவளுக்கு மனநிலை சரியில்லை போலிருக்கு",என உறவினர்கள்,
இப்படி அனைவரும் வாய்க்க்ய் வந்தப்படி கூறினர்.
கிருஷ்னம்மாளின் கல்வி அரைகுறையாகவே போனது.நாளடைவில்,எதிர்காலத்தில் நடக்கப்போவதையெல்லாம் அவள் கூறத் தொடங்கினாள்.


"1947இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும்", என அன்றைய மக்களுக்கு கிருஷ்ணம்மாள் வாக்குகூறினாராம்.அது நடந்தது.
"2011ல் இயற்கையினால் அழிவுகள் ஆங்காங்கே ஏற்படும்,என்றும் குடிக்கும் தண்ணீருக்காக கேரளமாநிலத்திற்கும்,அதன் அண்டைமாநிலத்திற்கும் பகை உச்சமாகும்", என.,1952ல் கூறியுள்ளார்.
(அதுவே,2011ல் முல்லைப்பெரியாறு பிரச்சனை,என கிருஷ்னம்மாளின் நலன்விரும்பிகள்,இன்றுக் கூறுகின்றனர்)
"2016ல் தமிழக கேரள மாநிலத்துக்கிடையே,
அன்பு அதிகமாகும்.இரு மாநிலத்திற்கும் ஓர் உறவுப் பாலமாய்.,சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஆன்மீக வழிக்காட்டுவான்..அவன் இரு மாநில மொழிகளும் அறிவான் அவன் இரு மாநிலத்திற்கும் உறவுக்காரன் ஆவான்.அவன் சிறிதுகாலமே உலகவாழ்வை வாழ்வான்",
என இன்று கூறியுள்ளார்.


"அனைத்தையும் கூறும் நீங்கள்,சுனாமி வரப்போவதை ஏன் கூறவில்லை?",
என ஒருப் பத்திரிக்கை நிருபர் கேட்டதிற்கு,
"உன் பேர் என்ன?",
என கிருஷ்ணம்மா கேட்டாராம்.
"என் பெயர் ராமானுஜம்",
என நிருபர் கூறியுள்ளார்.
"உன் தந்தைப் பெயர் என்ன?",
என அவர் கேட்க,
"என் அப்பா பேரு கிருஷ்ணநாயர்",
என நிருபர் கூறினாராம்.
"உன் தாத்தா பேரு",
என கிருஷ்ணம்மாள் மறு கேள்வி கேட்க,
"பத்ரிநாயர்...",
என தன் தாத்தாவின் பேரை நிருபர் கூற,
"உன் தாத்தாவின்னுடைய தாத்தாப் பேரு என்ன?",
என கிருஷ்ணம்மாள் கேட்டதும்,
"அவர்களைப் பற்றி என் தந்தையோ தாத்தாவோ என்னிடம் கூறவில்லை.எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்...",
என நிருபர் கூற,
"அதேப்போல் தான் ,சுனாமி வரப்போவதை என் பகவதிக் கூறவில்லை.எனக்குத் தெரிந்தவரை தான் என்னால் கூறமுடியும்.உனக்கு கொல்லு தாத்தா பேரு தெரியவில்லை என்பதால்,உன் அப்பாவை நீ தப்புசொல்ல முடியாது.அதேப்போல், ஒருசில விஷயங்கள்
விதிப்படி நடந்தே ஆகவேண்டும்,அதை யாராலும் தடுக்க இயலாது...அதற்காக என் பகவதியையும் குறைகூற இயலாது",
எனக்கூறி சிரித்தாராம்.




தற்போது,கிருஷ்ணம்மாளுக்கு 81 வயது இருக்கும்.
இன்றும் அவர்  அனைவருக்கும் நல்வழிக்காட்டியாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
யாருக்கும்,அருள்வாக்கு என்றோ,ஜோதிடம் என்றோ யாருக்கும் ஆரூடம் கூறுவதில்லை.
யாருக்கேனும்,ஏதாவது சொல்ல எண்ணினால் மட்டுமே கூறுகிறார்.
மக்கள் கூட்டமாக சந்திப்பதைகூட அவர் விரும்புவதில்லை.
அவர் இன்னும் நீண்ட ஆயுள் பெற,என்ட பகவதி அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.....









No comments:

Post a Comment